Niger இல் இருந்து இதுவரை 560 பேர் வெளியேற்றம் - நான்காவது விமானம் தயாராகிறது
Niger நாட்டில் உள்ள பிரெஞ்சு மக்கள் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நேற்று புதன்கிழமை மாலை வரை மூன்று விமானங்களில் 560 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை காலை Roissy-Charles-de-Gaulle விமான நிலையத்தில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் 262 பேர் வந்தடைந்த நிலையில், இரண்டாவது விமானம் பிற்பகல் வந்தடைந்தது. அதில் சில பிரெஞ்சு மக்களும், போர்த்துக்கல், பெர்ல்ஜியம், எதியோப்பியா, லெபனான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்தடைந்தனர்.
பின்னர் நேற்று இரவு மூன்றாவது விமானமும் பரிசை வந்தடைந்தது. அதிலும் சில பிரெஞ்சு மக்களும் ஜெர்மன், கனடா, பெல்ஜியம், அமெரிக்கா, ஒஸ்ரியா, இந்தியர்கள் சில என பலர் இருந்தனர்.
மொத்தமாக 992பேர் அழைத்துவரப்பட்டனர். இவர்களில் 560 பேர் பிரெஞ்சு மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நான்காவது விமானம் தயாராகி வருவதாகவும், இன்று காலை பரிசை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments