Header Ads

'பழனிசாமி துரோகத் தமிழர்'

 


பழனிசாமிக்கு துரோகத் தமிழர் பட்டம் கொடுக்கலாம் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் டி.டி.வி.தினகரன் கருத்து தெரிவிக்கையில், மதுரையில் பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு இல்லை. வீழ்ச்சி மாநாடாகும். அந்த மாநாட்டில் அதிகபட்சமாக 2.50 லட்சம் பேர் தான் கலந்துகொண்டுள்ளனர்.

பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டம் வழங்கியுள்ளனர். இதனால் புரட்சி என்ற வார்த்தைக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. அவருக்கு துரோகத் தமிழர் என்று பட்டம் கொடுக்கலாம்.

தான் செய்த துரோகத்தாலும், தவறாக ஈட்டிய பணப் பலத்தாலும், கட்சியை கபளீகரம் செய்ததுதான் அவர் செய்த புரட்சி. முதல்வர் ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கும் எந்த வேற்றுமையும் இல்லை. இவர்களுக்கு மாற்றுக் கட்சியாக அ.ம.மு.கவை தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.