Header Ads

சிறுவர் இருதய சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தம்!


கராப்பிட்டிய  போதனா  வைத்தியசாலையில் சிறுவர் இருதய  சிகிச்சை பிரிவின் பல சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என  வைத்தியசாலையின் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் இருதய பிரிவின் விசேட வைத்திய நிபுணர் தொழிலுக்காக வெளிநாடு சென்றமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சிறுவர்களுக்கான இருதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என வைத்தியசாலை நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.



No comments

Powered by Blogger.