Header Ads

வவுனியா இரட்டைக் கொலை: ஐவருக்கும் விளக்கமறியல்


வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்றைய தினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை, எதிர்வரும்; 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா தோணிக்கல் பகுதியில் வாள் வெட்டு தாக்குதல் நடத்தி வீடொன்றின் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் போது 2 பேர் கொல்லப்பட்டனர்.

பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்ற வீடொன்றே இவ்வாறு தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.

இதன்போது 21 வயதுடைய யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அத்துடன் 2 முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை 24 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் நீதிமன்றம் அனுமதித்திருந்தது.

இதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரும், தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் உயிரிழந்த 34 வயதுடைய நபரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பிரதான சந்கேநபரால் பணம் வழங்கப்பட்டு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் பிரதான சந்தேகநபர் அந்த பகுதியில்;, இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

No comments

Powered by Blogger.