Header Ads

🔴 விசேட செய்தி : புயல் எச்சரிக்கை - பரிசில் உள்ள அனைத்து பூங்கா, தோட்டங்களும் மூடப்படுகிறது



புயல் எச்சரிக்கை காரணமாக பரிசில் உள்ள பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பாராத வானிலை மாற்றமாக இன்று புதன்கிழமை பரிஸ் முழுவதும் பலத்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி. மீ வேகம் வரை புயல் வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதையடுத்து முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பூங்காக்கள் கல்லறைகள் உட்பட புல்வெளிகள், தோட்டங்களும் மூடப்படுகிறது.



நாள் முழுவதும் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்

No comments

Powered by Blogger.