ஜேர்மனியின் ஆயுதப்படைக்கு ஆட்களை சேர்ப்பதில் சிக்கல் !
ஜேர்மனியின் ஆயுதப்படைகள் புதிய ஆட்களை சேர்ப்பதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விண்ணப்பதாரர்கள் ஏழு சதவீதம் குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தில் பயிற்சியின் போது சுமார் 30 சதவீதமானவர்கள் வெளியேறுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவத்தை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜேர்மன் நாடாளுமன்ற ஆணையர், சில வீரர்களின் குடியிருப்புகளில் இணைய வசதி மற்றும் சுத்தமான கழிவறைகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியின் இளைஞர்கள் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவு இராணுவ ஆட்சேர்ப்பையும் பாதித்துள்ளது எனவும் 2050 ஆம் ஆண்டில் 15-24 வயதுடையவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் குறையும் என அவர் கூறியுள்ளார்.
ஆட்சேர்ப்புக்கு வரும்போது, இளைய தலைமுறையினர் கடந்த காலத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலையில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், இராணுவ வாழ்க்கைக்கு ஏற்ப மாறுவது கடினமாக இருப்பதாகவும் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
No comments