Header Ads

நவாஸ் ஷெரீபே முதல்வராக பதவி ஏற்பார்: ஷெபாஸ் ஷெரீப்


அடுத்த பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ஆட்சியை கைப்பற்றும் பட்சத்தில் நவாஸ் ஷெரீபே முதல்வராக பதவி ஏற்பார் என பாகிஸ்தானிய பிரதமரும் அவரது இளைய சகோதரருமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று முறை பாகிஸ்தானின் பிரதமராக செயல்பட்ட நவாஸ் ஷெரீப் நாடு கடந்த நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

எதிர்வரும் சில வாரங்களில் அவர் தாயகம் திரும்புவார் என தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், அவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைக்கு அமைய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் மேல்நீதிமன்றத்தினால் வாழ்நாள் முழுவதும் பொதுப்பணியில் ஈடுபடுவதற்கு தகுதி அற்றவர் என அவருக்கு எதிராக தீர்ப்பளித்திருந்தது.

பனாமா பேப்பர்ஸ் வழக்கை விசாரித்த மேல்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மேல் நீதிமன்றம் தற்காலிக விடுதலை வழங்குவதற்கு முன்னர் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றங்களுக்காக 7 ஆண்டு சிறைத்தண்டனையினை அனுபவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.