Header Ads

சிரியாவில் குண்டுத்தாக்குதல்: 6 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த குண்டு வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாத குண்டு வெடிப்பாக கருதுவதாக சிரியாவின் உள்துறை அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

இனந்தெரியாத நபர்களால், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக் சிரிய சுகாதார அமைச்சர் ஹசன் அல்-கபாஷ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைளை சிரிய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.