Header Ads

🔴 பரிசில் கொள்ளை! - சென் நதிக்குள் பாய்ந்த கொள்ளையனை விரட்டிப் பிடித்த காவல்துறை!!

 


பரிசில் உள்ள ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று நேற்று இரவு கொள்ளையிடப்பட்டுள்ளது. கொள்ளையனை காவல்துறையினர் விரட்டி பிடித்துள்ளனர்.



 ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 8 ஆம் வட்டாரத்தில் Rue Saint-Honoré வீதியில் உள்ள Valentino நிறுவனத்தின் கடை ஒன்றே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது. 24 வயதுடைய இளைஞன் ஒருவன் குறித்த கடையின் கதவினை உடைத்து, உள்ளே நுழைந்து, அங்கிருந்து சில ஆடம்பர கைப்பைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

கதவு உடைக்கப்பட்டதும் காவல்துறையினருக்கு தானியங்கி முறையில் சமிக்ஞை கிடைத்துள்ளது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.

கொள்ளையன் சில கைப்பைகளை Citroën Xsara மகிழுந்துக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து Place de la Concorde பகுதி நோக்கி தப்பிச் சென்றான்.

அவனை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். சில கிலோமீற்றர்கள் தூரம் இடம்பெற்ற துரத்தலை அடுத்து, கொள்ளையன் மகிழுந்தை விட்டு இறங்கி, தப்பி ஓடி சென் நதிக்குள் பாய்ந்துள்ளான்.

காவல்துறையினர் சென் நதிக்குள் பாய்ந்து துரத்திச் சென்று கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

கொள்ளையடிக்கப்பட்ட கைப்பைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். 



No comments

Powered by Blogger.