Header Ads

பிரான்சில் தடுப்பூசி மையம் மூடப்பட்டது!



கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வந்த Stade de france தடுப்பூசி மையம் வியாழக்கிழமையுடன் மூடப்பட்டுள்ளது.
93 ஆம் மாவட்ட கவல்துறையினரும், இல் து பிரான்சின் பிராந்திய சுகதார மையமும் இணைந்து உருவாக்கிய இந்த தடுப்பூசி மையம் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி திறக்கப்பட்டது. பிரான்சில் கொரோனா தொற்று அதிகம் பரவியிருந்த மாவட்டமாக Seine-Saint-Denis மாவட்டம் இருந்ததால் இந்த அவசரகால தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது.
இங்கு இதுவரை 545,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான அதிகளவானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையமாக இது இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை,நாடு முழுவதும் தற்போது கிட்டத்தட்ட 1700 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை கல்வி அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 1,692 வகுப்பறைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. முன்னதாக கடந்தவாரத்தில் 2,366 வகுப்பறைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய வாரத்தில் 3.299 வகுப்பறைகள் மூடப்பட்டிருந்தன. வாராவாரம் மூடப்படும் வகுப்பறைகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகின்றயாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 20-27 இடைப்பட்ட திகதிகளுக்குள் 374,191 உயர்கல்வி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை (உமிழ்நீர்) கோரப்பட்டிருந்தது. அவர்களில் 199,549 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று குறைவடைந்த 47 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஓப்படைக்கின்றோம் .
👇
நன்றி

No comments

Powered by Blogger.