Header Ads

பிரயாணத்தடையை மீறி கொழும்பில் இருந்து சென்ற அதி சொகுசு பஸ்கள் மடக்கி பிடிப்பு

 

பிரயாணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்களை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த அதி சொகுசு பேருந்துகள் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்ததாகவும் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பஸ்ஸில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது மூன்று பேருக்கு கொவிட் தொற்று காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார்.

இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக்கடந்து கொழும்பிற்குச்சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்களோ அல்லது பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  பிரயாணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த 3 அதி சொகுசு பஸ்களை பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர். குறித்த அதி சொகுசு பேருந்துகள் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை தும்பாலஞ்சோலை இராணுவ முகாம் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாகாணங்களுக்கிடையிலான பிரயாணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மூன்று சொகுசு பஸ் வண்டிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பஸ் வண்டிகளில் 49 பயணிகள் இருந்ததாகவும் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பஸ்ஸில் பயணித்த பயணிகள் அன்டிஜன் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது மூன்று பேருக்கு கொவிட் தொற்று காணப்பட்டதாக ஏறாவூர்ப் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்தார்.

இந்த பஸ் வண்டிகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து நான்கு மாகாணங்களைக்கடந்து கொழும்பிற்குச்சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்களோ அல்லது பாதை அனுமதியோ இருக்கவில்லையெனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடாத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டதுடன் ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  




🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.