Header Ads

நாட்டில் இரு வாரங்கள் ஊரடங்கு சட்டம்; ஜனாதிபதியிடம் கோரிக்கை


 நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையினால் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் எதுவும் நடக்காத நிலையில் நாட்டில் பூரணமான ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்படுவதாக கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் அச்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றய தினம் கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் நாட்டில் தொற்றாளர் எண்ணிக்கை தெடர்ந்தும் அதிகரித்து வருவது தொடர்பாகவும், தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலமை நீடித்தால் நாடு பாரிய ஆபத்தை சந்திக்க நோிடும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் , கடுமையான உத்தரவுகளுடன் ஊரடங்கு சட்டத்தை ஆக குறைந்தது 2 வாரங்களாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என கூட்டத்தில் கலந்துகொண்ட  வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஊரடங்கு சட்டத்தை மிக இறுக்கமாக பின்பற்றிய நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ளமையினை கருத்தில் கொண்டு இங்கும் அதே நடைமுறையை பின்பற்றவும் இதற்கான அனுமதியை ஜனாதிபதியிடம் இன்று கோருவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.