உயிர்த்தஞாயிறு தாக்குதல் - காலம் கடந்து வெளியாகும் மற்றொரு தகவல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் தற்போது புதிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது இந்த தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதுவே அதுவாகும்.
பாகிஸ்தானிய உளவுப் பிரிவினர் இந்த தாக்குதல் முயற்சி தொடர்பில் முன்கூட்டியே இலங்கைக்கு தகவல் வழங்கியிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தொலைத்தொடர்பு வலையமைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலம் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தொடாபில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பேசிக் கொள்வதாக இலங்கை அதகாரிகளுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவு எச்சரிக்கை விடுத்திருந்தது என கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல்களை வழங்கியிருந்தது என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தானும் தாக்குதல் குறித்து எச்சரித்திருந்தது என தற்போது செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments