Header Ads

நற்பெயருக்கு களங்கம் - ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரினார் அலி சப்ரி


ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பொய்யான தகவலை வெளியிட்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியமைக்காக 14 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்துமாறு கோரி, நீதியமைச்சர் அலி சப்ரி, தனது சட்டத்தரணி ஊடாக பிரமாண பத்திரம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

காலி பத்தேகமை பிரதேசத்தில் வசித்து வரும் ஆனந்த லேனரோய் என்ற நபருக்கே இந்த பிரமாண பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்திற்கான பிரஜைகள் அமைப்பு கடந்த 10 ஆம் திகதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கொன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபருக்கு நீதியை வழங்குமாறு அறிவித்து, நீதியமைச்சர், மேல் நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார்.

தனது சட்டத்தரணி சனத் விஜயவர்தன ஊடாக இந்த பிரமாண பத்திரத்தில் 14 நாட்களுக்குள் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தத் தவறினால், ஆனந்த லேனரோய்க்கு எதிராக வழக்கு தொடரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.