Header Ads

நாட்டிற்கு வந்தது குவைத்தில் கொலைசெய்யப்பட்ட இலங்கை யுவதியின் சடலம்


குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த மஹவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான இலங்கைப் பெண்ணொருவரின் சடலம் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

 கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவரால்  குறித்த யுவதி கொலைசெய்யப்பட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இலங்கை யுவதி கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த பெண்ணின் சடலம் நேற்றுக் காலை கட்டார் ஏர்வேஸ் விமானம் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇


    

No comments

Powered by Blogger.