Header Ads

கொரோனா அபாய வலமாக மாறும் வடமாகாணம்: ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா !


யாழ்.மாவட்டத்தில் 14 பேர் உட்பட வடக்கில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 5 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் 7 பேருக்கும், தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்றுறை பகுதிகளில் இருவருக்குமாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது.

இதேபோல் மன்னார் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும், கிளிநொச்சி வைத்தியசாலை மற்றும் பளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுகளில் 3 பேருக்கும்,

வவுனியா மாவட்டத்தில் குருக்கல் புதுக்குளம் பகுதியில் 5 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் 2 பேருக்குமாக 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பணிப்பாளர் கூறியுள்ளார்.    

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.