Header Ads

எலிசபெத் ராணிக்கு வருடத்தில் 2 முறை பிறந்தநாள் கொண்டாடப்படுமாம் - ஏன் தெரியுமா?


இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த ஏப்ரல் 21ம் தேதி அன்று தனது 95வது வயதை எட்டினார். ஆனால் எலிசபெத் ராணியின் கணவர் மற்றும் டியூக் ஆப் எடின்பர்க் என்றழைக்கப்படும் இளவரசர் பிலிப் இறந்ததால் அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படவில்லை. கணவர் தன்னுடன் இல்லாத காரணத்தினால் அவரது பிறந்த நாள் நிழலாடியது. 

ராணி வழக்கமாக தனது உண்மையான பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடுவார். அன்றைய தினத்தில் ஹைட் பூங்காவில் 41-துப்பாக்கி குண்டுகள் முழக்கம், வின்ட்சர் கிரேட் பூங்காவில் 21-துப்பாக்கி குண்டுகள் முழக்கம் மற்றும் லண்டன் கோபுரத்தில் 62-துப்பாக்கி குண்டுகள் முழக்கத்துடன் அவருக்கு மரியாதையை செலுத்தப்படும். 


No comments

Powered by Blogger.