Header Ads

மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!


யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது.

யாழ். மாநகர சபையினால் மாநகர காவல் படை அமைத்தமை மற்றும் அதன் சீருடை தொடர்பாக மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன், இந்தக் கைது நடவடிக்கையானது இந்த ஆட்சியின் கடுமையான இன மற்றும் அரசியல் பாதுகாப்பின்மை பாசிசமானது நிலையான பாதையில் தவிர்க்க முடியாதளவில் உயரத்தை எட்டியுள்ளதாக என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.