Header Ads

தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருக்கும் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது- சுமந்திரன்


தமிழ் மக்களைத் தொடர்ந்தும் பீதியில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் விரும்புவதன் வெளிப்பாடே மணிவண்ணனின் கைது நடவடிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏனைய மாநகர சபைகளைப் போன்று யாழ்ப்பாணம் மாநகர சபையும் அந்த சபைகளுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முனைகின்றபோதே இவ்வாறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, மணிவண்ணன் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.