Header Ads

ஐ.நா. கூட்டத்தொடருக்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை - அரசாங்கம்



இந்தியா அல்லது அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின்போது அது காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

இதனால் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.