Header Ads

மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலி!



வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது.

கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கல்கிரியாகம காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

No comments

Powered by Blogger.