Header Ads

பிரான்ஸில்சிறுவர் துஷ்பிரயோகம்! தமிழர்களே பிள்ளைகள் மீது விழிப்பாயிருங்கள்!

 


கடந்த சில ஆண்டுகளில் குழந்தைகள், சிறுவர்கள் உற்பட பலரை பாலியல் பலாத்காரம் செய்ததாக அல்லது பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 35 வயதான பியர்-யோன் ஒய் என்ற போலீஸ் அதிகாரிக்கு வெள்ளிக்கிழமையன்று 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பயங்கரமான வழக்கு, இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகளால் கூட தாங்கிக்கொள்ள முடியாத கொடுமையான நிகழ்வுகள் அதற்கான புகைப்பட ஆதாரங்கள் எல்லாம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

2011 மற்றும் 2018 க்கு இடையில் குழந்தைகள் துஷ்பிரயோகம் தொடர்பான புகார்கள் எழுந்தன அந்த நேரத்துல குற்றவாளி இணையத்தில் சிறுவர் ஆபாசப் படங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார், அந்த படங்கள் உற்பட சுமார்

234,000 க்கும் மேற்பட்ட சிறுவர் ஆபாச புகைப்படங்கள் குற்றவாளியின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

மார்ச் 2018 இல் மான்டெஸ்-லா-ஜோலி (யெலைன்ஸ்) இல் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டை சோதனை செய்த போதே, ​​புலனாய்வாளர்கள் மேற்படி 234,000 க்கும் மேற்பட்ட புகைப்படங்களையும்

கிட்டத்தட்ட 7,000 சிறுவர் ஆபாச வீடியோக்களையும் கண்டுபிடித்தனர், மேலும் சில ஆதாரங்களை குற்றவாளி மறைத்திருக்கலாம் அல்லது எரித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

மேலும் குழந்தைகளை மயக்கமடைய செய்ய அல்லது தூங்க வைக்க குற்றவாளி பயன்படுத்திய மருந்து வகைகள் பற்றிய தடயங்களும் அந்த வீட்டில் கைப்பற்ற பட்டன. மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தலை முடியில் இருக்கும் எச்சங்கள் குற்றவாளியின் வீட்டில் பெறப்பட்ட தடயங்களோடு பொருந்துகின்றன.

சந்தேகத்திற்கு இடமின்றி குற்ற செயல்களை புரிந்து வந்த பியர்-யோன் ஒய் ஒரு வழக்கின் பொருட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 27 வயதான ஏஞ்செவின் விசாரணையின் மூலம் அடையாளம் காணப்பட்டார்.

விசாரணைகளில் இவர்கள் இருவரும் 2010 மற்றும் 2018 க்கு இடையில் பெடோஃபைல் தளங்கள் வழியாக சந்தித்தனர் என்பது தெரிய வந்தது







No comments

Powered by Blogger.