Header Ads

இல்-து-பிரான்சிலும் மிகவும் கடுமையான கொரோனாப் பரவலும் தொடர்ச்சியான சாவுகளும்,

 


பிரான்சிலும் முக்கியமாக இல்-து-பிரான்சிலும் மிகவும் கடுமையான கொரோனாப் பரவலும் தொடர்ச்சியான சாவுகளும், தொடரும் நிலையில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறி வருகின்றது.


இந்நிலையில்,

 கடந்த 24 மணி நேரத்திற்குள் 266 பேர் சாடைந்துள்ளனர்.   இதனால் மொத்தச் சாவுகள் 89.565     இனைத் தாண்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 30.303   பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.   இதனால் பிரான்சில்  மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.963.165   ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 64 321   (+266) பேர் சாவடைந்துள்ளனர்.  மற்றவர் உதவியுடன் வாழும் முதியோர் இல்லங்களில் (EHPAD) 25.174 பேர் சாவடைந்துள்ளனர்

24.969 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.

3;918   பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

பிரான்சின் வைத்தியசாலைகளில் 74 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.