Header Ads

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி!



பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. அதன்படி, மூடப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.

பல கட்டங்களின் கீழ் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

No comments

Powered by Blogger.