Header Ads

லியோன் நகரத்தில் சுத்தியலால் அடித்துப் படுகொலை

 கடந்த வியாழக்கிழமைக்கும் வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்ட நள்ளிரவில், கொல்லப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.


சுத்தியலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், 30 வயதுடைய பெண் ஒருவர், லியோன் நகரத்தின், 3வது வட்டாரப் பிரிவில் உள்ள அவரது வீட்டில் காவற்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


கணவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

உடனடியாக, லியோன் வழக்காடு மன்றத்தின் நீதிபதி, விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையினை தீவிரப்படுத்தியிருந்தார்.

கொலை செய்து விட்டுத் தப்பியோடியிருந்த நிலையில், 24 மணித்தியாலங்களில் இந்தப் பெண்ணின் கணவன், சுவிற்சர்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு, பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

2020 இல் மட்டும் 90 பெண்கள் அவர்களின் கணவன் அல்லது துணைவனால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது 2019 இல் 146 ஆக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.