Header Ads

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகள் திறப்பு!


மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த பாடசாலைகள் ஏப்ரல் 5ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டவுள்ளதாக தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் பொது முகாமையாளர் அருட் தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் தரம் 05, 11, மற்றும் 13 ஆம் வகுப்புகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளே குறித்த தினத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 29ஆம் திகதி, மீளத் திறப்பதற்கு முன்னதாக  தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.