Header Ads

கற்களை கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் !!

 


காவல்துறை அதிகாரி ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலை அடுத்து, அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

 
இந்த தாக்குதல் Essonne மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அத்துமீறிய மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டி இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து, Val d'Yerres பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
 
அதன்போது, மாலை 7 மணி அளவில் இளைஞன் ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி Prairie de l'Oly நகர் நோக்கி பயணித்துள்ளார். அவரை தடுத்து நிறுத்த முற்பட்டபோதும் அவர் தொடர்ந்து பயணித்துள்ளார். ஆனால் சில நிமிடங்களில் குறித்த காவல்துறை அதிகாரிகளை சிலர் சுற்றி வளைத்தனர். 
 
பின்னர் அதிகாரிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர். கற்களை கொண்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். அவருக்கு 10 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு விடுக்கப்பட்டுள்ளது


No comments

Powered by Blogger.