இல்-து-பிரானஸ் ஆபத்தான நிலையை எட்டி உள்ளது
இல்-து-பிரானஸ் கடுமையான கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி பெரும் ஆபத்தான நிலையை எட்டி உள்ளது
நிலைமை கடுமையாக மோசமடைந்து, இல்-து-பிரான்சில் கொரோனத் தொற்று விகிதம் 100.000 பேரிற்கு 369 பேர் எனும் அளவிற்கு ஆபத்தாக உள்ளது.
பிரான்சில் 223பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (12.03.2021) சாவடைந்திருக்கும் நிலையில், இல்-து-பிரான்சில் மட்டும் 51 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.606 ஆக உயர்ந்துள்ளது.
இங்கு 5.669 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.096 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 94.16% ஆகும்.
இல்-து-பிரான்சின் மொத்த தீவிரசிகிச்சைக் கட்டில்களின் கொள்ளளவு நாளை நிரம்பி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது, இல்துபிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 96 % என்பது அச்சத்திற்குரிய விடயமாகும்.
இல்து-பிரான்சின் மாவட்டங்களில்
Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.149 பேர் - 3.369 பேர் சாவு (+10)
La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 851 பேர் - 1.878 பேர் சாவு (+4)
Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 651 பேர் - 2.316 பேர் சாவு (+9)
Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 837 பேர் - 2.120 பேர் சாவு (+7)
Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 542 பேர் - 1.433 பேர் சாவு (+3)
Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 484 பேர் - 1.507 பேர் சாவு (+5)
L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 615 பேர் - 1.439 பேர் சாவு (+8)
La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 540 பேர் - 1.542 பேர் சாவு (+5)
No comments