Header Ads

இல்-து-பிரானஸ் ஆபத்தான நிலையை எட்டி உள்ளது


 இல்-து-பிரானஸ் கடுமையான கொரோனாத் தொற்றிற்கு உள்ளாகி பெரும் ஆபத்தான நிலையை எட்டி உள்ளது


நிலைமை கடுமையாக மோசமடைந்து,  இல்-து-பிரான்சில் கொரோனத் தொற்று  விகிதம் 100.000 பேரிற்கு 369 பேர் எனும் அளவிற்கு  ஆபத்தாக உள்ளது.

பிரான்சில் 223பேர் கடந்த 24 மணி நேரத்திற்குள் (12.03.2021)  சாவடைந்திருக்கும் நிலையில்,    இல்-து-பிரான்சில் மட்டும்  51 பேர் சாவடைந்துள்ளனர். இத்துடன் இல்-து-பிரான்சின் கொரோனாச் சாவுகள் 15.606   ஆக உயர்ந்துள்ளது.

இங்கு 5.669 பேர் வைத்தியசாலைகளில் கொரோனாத் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிகிச்சைப் பிரிவில் 1.096   பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இல்-து-பிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 94.16% ஆகும்.

இல்-து-பிரான்சின் மொத்த தீவிரசிகிச்சைக் கட்டில்களின் கொள்ளளவு நாளை நிரம்பி பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இது, இல்துபிரான்சின் தீவிரசிகிச்சைக் கொள்ளளவின் 96 % என்பது அச்சத்திற்குரிய விடயமாகும்.

இல்து-பிரான்சின் மாவட்டங்களில்

    Paris - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  1.149 பேர் -   3.369 பேர் சாவு  (+10)
    La Seine-Saint-Denis - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  851 பேர் - 1.878 பேர் சாவு (+4)
    Le Val-de-Marne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 651 பேர் - 2.316 பேர் சாவு (+9)
    Les Hauts-de-Seine- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 837 பேர் -  2.120 பேர் சாவு (+7)
    Les Yvelines- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  542 பேர் - 1.433 பேர் சாவு (+3)
    Le Val-d'Oise- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  484 பேர் - 1.507 பேர் சாவு (+5)
    L'Essonne- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் 615 பேர் -  1.439 பேர் சாவு (+8)
    La Seine-et-Marne - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்  540 பேர் -  1.542 பேர் சாவு (+5)
 

No comments

Powered by Blogger.