Header Ads

இதுவரை 7 இலட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!


இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்து 60 ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது. 
புதிதாக 1,217 பேர் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை நேற்று (வெள்ளிக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இலங்கையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

No comments

Powered by Blogger.