Header Ads

லியோன் நகரில் இடம்பெற்ற பாரிய வன்முறை - 30 வாகனங்கள் தீக்கிரை!


 லியோன் நகரில் நேற்று இடம்பெற்ற பாரிய வன்முறை வெறியாட்டத்தை தொடர்ந்து, இன்று லியோன் நகர் முழுவதும் பாரிய காவல்துறை படை குவிக்கப்பட்டுள்ளது. 

 
நேற்று வெள்ளிக்கிழமை Rillieux-la-Pape பகுதியில் பலத்த வன்முறை வெடித்திருந்தது. 30 பேர் வரை பங்கேற்ற இந்த வன்முறையில் 13 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. 6 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்நிலையில், இன்று அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
உள்துறை அமைச்சர் Gérald Darmanin சற்று முன்னர் தெரிவித்ததன் படி, காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் என மொத்த 200 படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சட்ட நடவடிக்கைகளை அவர்கள் எடுப்பார்கள் எனவும் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.