கடந்த 24 மணி நேரத்திற்குள் 379 பேர் சாடைந்துள்ளனர்.
ஓரிரு நாட்களில் அரசாங்கம் மேலும் கட்டுப்பாடகளை அறிவிக்க இருக்கும் நிலையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 379 பேர் சாடைந்துள்ளனர். இதனால் மொத்தச் சாவுகள் 85 321 இனைத் தாண்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ஆய்வுகூடப் பெறுபேறுகள் கிடைக்காத நிலையில், திங்கட் கிழமைகளில் எப்பொழுதுமே 20 சதவீதப் பெறுபேறுகள் மட்டுமே கிடைக்கப்பெறும் நிலையில், இன்று திங்கட்கிழமை 4.703 பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதனால் பிரான்சில் மொதத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.760.671 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 61.947 பேர் சாவடைந்துள்ளனர்.
25.430 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.
3.544 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.
பிரான்சின் வைத்தியசாலைகளில் 69 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது
No comments