Header Ads

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் 185 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!



வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 185 இலங்கையர்கள், நாடு திரும்பியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14 விமான சேவைகள் ஊடாக 978 பேர், நாடு திரும்பியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காலப்பகுதியில் ஜேர்மன், போலந்து, அவுஸ்திரேலியா, எகிப்து, பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, யுக்ரேன் ஆகிய நாடுகளில் இருந்து 72 வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

No comments

Powered by Blogger.