Header Ads

கல்லூரியில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ்!!

 


கல்லூரி ஒன்றில் புதிய பிரிவைச் சேர்ந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. 

 
Eaubonne, Val-d'Oise நகரில் உள்ள Jules-Ferry கல்லூரியில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கொரோனா வைரசே இங்குள்ள பல மாணவர்களுக்கு கண்டறியப்பட்டதாக  L'Agence Régionale de Santé தெரிவித்துள்ளது. 
 
அதைத் தொடர்ந்து உடனடியாக கல்லூரி மூடப்பட்டது. மார்ச் 1 ஆம் திகதி வரை கல்லூரி மூடப்பட்டிருக்கும் எனவும், மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்து வரும் நாட்களில் மிகப்பெரிய கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.