Header Ads

பிரித்தானியாவிற்கு வானிலை ஆராய்ச்சி மையம் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 


பிரித்தானியாவை ராட்சத பனிப்புயல் ஒன்று புரட்டிப்போட இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

மழையும் பனியுமாக நாட்டில் பெரும் புயல் ஏற்படவுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் -15 டிகிரி மற்றும் இங்கிலாந்தில் -6 டிகிரி செல்ஷியஸாக வெப்பநிலை இறங்க இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளுக்கு பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் 5 சென்றிமீற்றர் அளவுக்கும், உயரமான பகுதிகளில் 40 சென்றிமீற்றர் அளவுக்கும் பனிப்பொழிவு இருக்கும் என எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தைப் பொருத்தவரை, மோசமான வானிலை காரணமாக பெரு வெள்ளம் ஏற்படலாம்.

200 இடங்களுக்கு ஏற்கனவே பெரு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.