சீன போலி கொரோனா தடுப்பூசி - அதிர்ச்சிக்குள்ளாகும் உலக நாடுகள்!!
சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்ப போலி கொரோனா தடுப்பூசி தயாரித்த குழுவை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.
தடுப்பூசி தொடர்பான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சீன காவல்துறையினர் 80-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து 3,000 க்கும் மேற்பட்ட போலி டோஸ் கொரோனா தடுப்பூசியை பறிமுதல் செய்ததாக தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஊசிகளில் saline செலுத்துவதன் மூலம் போலி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இந்த தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கலாம் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
போலி தடுப்பூசி விற்பனை தொடர்பில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் கிழக்கு மாகாணமான ஷாண்டோங் உள்ளிட்ட பல இடங்களில் சீன பொலிஸ் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
No comments