லண்டனில் மர்ம நபரால் கத்தி குத்து தாக்குதல்…..!
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kilburn-ல் உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு கத்தி குத்து சம்பவத்தில் பலத்த காயமடைந்த இரண்டு பேர் தற்போது உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னர் தெற்கு லண்டனில் கடந்த வெள்ளிக் கிழமை Croydon பகுதியில் மட்டும் 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
நடந்த கத்தி குத்தி சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்த நிலையில், 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கத்திகுத்து சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் Oakfield சாலையில் உள்ள West Croydon நிலையம் அருகே 24 வயது மதிக்கத்தக்க 10-வது நபர் குத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து Croydon-ன் Wisbeach சாலையில் உள்ள இரண்டு பேர் கத்தி குத்து காயங்களுடன் கிடந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
No comments