Header Ads

கொரோனா நோயாளிகளால் நிரம்பும் நிலையில் - இல்-து-பிரான்சின் மருத்துவமனை!!!

 இல்-து-பிரான்சின் மருத்துவமனைகளின் தீவிரசிகிச்சைப் பிரிவுகள் (services de réanimation) கொரோனா நோயாளிகளால் நிரம்பும் நிலையில், ஒரு எச்சரிக்கை ஒன்றை மருத்துவமனைகள் விடுத்துள்ளன.

 
 
அடுத்த திங்கட்கிழமையில் இருந்து, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த சத்திரசிகிச்சைகள், மற்றும் சிகிச்சைகளை இரத்துச் செய்யும் நிலைக்கு அரசினர் வைத்தியசாலைகளான AP-HP (Assistance Publique-Hôpitaux de Paris) தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இல்-து-பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 707 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது கடந்த வாரம் 616 ஆக இருந்தமை குறிபிடத்தக்கது. ஒரு வாரத்திற்குள் இல்-து-பிரான்சில் மட்டும் 100 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
 

No comments

Powered by Blogger.