Header Ads

பிரான்ஸ் முழுவதும் மழையுடன் கடுமையான வெள்ளப் பெருக்கு !!!

 


பெரும் மழையும், ஆறுகள் குளங்கள் நிரம்பி வெள்ள ஆபாயமும் ஏற்படும் என பிரான்சின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. பிரான்சின் கால நிலை மிகவும் மோசமானதாகவே உள்ளது.

 
திங்கட்கிழமை மாலை வரை இந்த முதற்கட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை 26 மாவட்டங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 23 மாவட்டங்களிற்கு கடுமையான வெள்ளப் பெருக்கு (crues) ஆபத்து வழங்கப்பட்டுள்ளது.
 
பிரான்சின் வடக்கு மற்றும் தென்-கிழக்குப் பகுதிகளிலேயே இந்த ஆபத்து எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
 
நாளை திங்கட்கிழமை பிரான்ஸ் முழுவதும் மழையுடன் மேகமூட்டமாகவே இருக்கப் போகின்றது.
 
இல்-து-பிரான்சின் மாவட்டங்கள் உட்பட பின்வரும் மாவட்டங்களிற்கு இந்த செம்மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
 
Aisne
Charente-Maritime
Eure
Gers
Gironde
Landes
Lot-et-Garonne
Nord,
Oise
Pas-de-Calais
Pyrénées-Atlantiques
Hautes-Pyrénées
Seine-Maritime,
Yvelines, 
Tarn-et-Garonne
Val-d'Oise
Aveyron
Charente
Haute-Garonne
Lot et le Tarn

No comments

Powered by Blogger.