Header Ads

இலங்கையில் 72,000 பேரைக் கடந்தது கொரோனா தொற்று!



நேற்று 963 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 72,174 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 940 பேர் மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர். நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 15 பேர் அடையாளம் காணப்பட்டனர்.மினுவாங்கொட-பேலியகொட கொரோனா கொத்தணி 68,155 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 8 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.தற்போது 6,155 பேர் நாடு முழுவதும் 66 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று, 591 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 65,644 ஆக உயர்ந்துள்ளது.715 பேர் கொரோனா சந்தேகத்தில் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.