Header Ads

யாழ். பல்கலைக்கழகத்தின் 55 வது பொதுப் பட்டமளிப்பு விழா..!



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24ம், 25ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இரண்டு நாள்களிலும், ஆறு அமர்வுகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் பட்டப்படிப்புகள், உள்வாரி, வெளிவாரி என 2 ஆயிரத்து 608 பேர் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்று யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொதுப் பட்டமளிப்பு விழா துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில், யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் முன்னிலையில் புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கவுள்ளார்.இரண்டு நாள்கள் – ஆறு அமர்வுகளாக இந்தப் பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது.



No comments

Powered by Blogger.