Header Ads

மேலும் 528 பேருக்கு கொரோனா!



இலங்கையில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கானவர்களில் இன்றைய தினம் 773 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறிய நிலையில் மொத்தமாக 66,984 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 379 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.