Header Ads

பிரித்தானியா பயணிப்போருக்கு 4 முறை நடத்தப்படும் கொரோனா பரிசோதனை


 

கொரோனா அச்சுறுத்தல் பட்டியலில் இடம்பெறாத பகுதியில் இருந்து பிரித்தானியா திரும்புவோர் கண்டிப்பாக 4 முறை கொரோனா சோதனைக்கு உட்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த 33 நாடுகளில் இருந்து பிரித்தானியா திரும்பும் பயணிகள் கண்டிப்பாக 10 நாட்கள் ஹொட்டல்களில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த விதிமுறை பெப்ரவரி 15 முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நாட்களில் கட்டாயமாக மூன்று முறை கொரோனா சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4-வது சோதனையானது தனிமைப்படுத்துதல் காலத்தின் நடுவில் மேற்கொள்ளவும் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் இந்த நான்கு கொரோனா சோதனைகளுக்குமான மொத்த கட்டணமும் சொந்த செலவில் செலுத்தப்பட வேண்டும்.

இந்த நான்கு சோதனைகளும் மேற்கொள்ளாத பயணிகள் அபராதம் செலுத்த நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.