Header Ads

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 1029 பேர் வைத்தியசாலைகளில்

 


கடந்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும்   22.371   பேரிற்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   


இதனால் பிரான்சில் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.583.135 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்திற்குள் 183   பேர் சாடைந்துள்ளனர்.   இதனால் மொத்தச் சாவுகள் 84.147  இனைத் தாண்டியுள்ளது.

வைத்தியசாலைகளில் மட்டும் மொத்தமாக 59.641 (+183)   பேர் சாவடைந்துள்ளனர்.

25.269 கொரோனத் தொற்று நோயாளிகள் தற்சமயம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளிற்கு நாள் உச்சத்தை எட்டுகின்றது.

3369  பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளனர். எண்ணிக்கை அதிகரித்து ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 1029  பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தீவிர சிகிச்சைப் பிரிவில் 195 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

பிரான்சின் வைத்தியசாலைகளில்  65,6 % கொரேனா நோயளிகளால் நிரம்பி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments

Powered by Blogger.