Header Ads

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 230பேர் உயிரிழப்பு!

 பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஒன்பதாயிரத்து 765பேர் பாதிக்கப்பட்டதோடு 230பேர் உயிரிழந்துள்ளனர்.



உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 40இலட்சத்து 47ஆயிரத்து 843பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 17ஆயிரத்து 396பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 17இலட்சத்து 40ஆயிரத்து 41பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 943பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

அத்துடன், இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 21இலட்சத்து 90ஆயிரத்து 406பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

No comments

Powered by Blogger.