Header Ads

பிரான்சில்18 வயதுடைய இளம் €500 யூரோகாக கடத்தப்பட்டுள்ளார். !!!



 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் €500 யூரோ பணத்துக்காக கடத்தப்பட்டுள்ளார். 

 
La Mée-sur-Seine, Seine-et-Marne நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 7 மணி அளவில் Melun நகர காவல்நிலையத்துக்கு வந்த வந்த பெண் ஒருவர் தனது மகள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். தவிர மகளை விடுவிப்பதற்கு €500 யூரோக்கள் பணம் கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். 
 
பின்னர் உடனடியாக செயற்பட்ட காவல்துறையினர், கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையின் மூலம் பணம் கொடுப்பதற்கு ஏற்பட்டு செய்யப்பட்டு, கடத்தல்காரர்களை அழைத்துள்ளனர். பின்னர் அதிரடியாக பாய்ந்த காவல்துறையினர், மகிழுந்தில் கடத்தி வைக்கப்பட்டிருந்த இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர். 
 
அத்தோடு, 23 வயதுடைய கடத்தல்காரன் ஒருவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த மீட்பு சம்பவம் சனிக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு இடம்பெற்றுள்ளது. 
 
கடத்தப்பட்ட இளம் பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

No comments

Powered by Blogger.