Header Ads

சுவிட்சர்லாந்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இருவர் சிறுவர்கள் ! தாயார் கைது



சுவிட்சர்லாந்தின் சோலோத்தர்ன் மண்டலத்தின் Gerlafingen பகுதியில், குடியிருப்பு ஒன்றில் பாடசாலை சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சனிக்கிழமை பகல் சுமார் 9.20 மணியளவில் கிடைத்த தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை குறிப்பிட்ட குடியிருப்பில் இருந்து சிறார்களின் சடலங்களை மீட்டுள்ளனர்.

ஆரம்ப விசாரணையிற்கு பின் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார், மரணமடைந்த சிறார்களின் தாயாரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்கு மண்டல பொலிசார் ஆணை பிறப்பித்துள்ளனர்.

விசாரணையில் கணவரை பிரிந்து, தமது இரு பிள்ளைகளுடன் அந்த தாயார் தனித்தே வாழ்ந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சுமார் 45 குடியிருப்புகள் கொண்ட புதிய வளாகம் அது என்றே கூறப்படுகிறது.

இச்சம்பவம் தங்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.