Header Ads

யாழில் கணவன் முன்னே மனைவி எடுத்த முடிவு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

 


யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.

கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.

அதனை கண்டு பதறிய கணவன் தீயை அணைத்து மனைவியை யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.