Header Ads

யாழ்ப்பாணத்தில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!


 

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாள்களுக்கு முன்னெடுக்கப்படும் என்று பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 2 ஆயிரத்து 300 கொவிட் -19 தடுப்பூசி மருந்துகள் கோரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஊடாக அதனை இன்று பெற்றுக்கொள்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிஷெல்ட் (AstraZeneca COVISHELD) கொவிட்-19 தடுப்பூசி 5 லட்சம் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்த தடுப்பூசி முதல் கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.