இத்தாலியில் தடையை மீறி திறக்கப்பட்டுள்ள உணவகங்கள்… அதிர்ச்சியில் அரசு
இத்தாலியில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்த வருகின்றது.
இந்நிலையில் கட்டுப்படுத்த, மாலை 6 மணிக்கு மேல் உணவகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது போக்குவரத்து மற்றும் சூப்பர் மார்கெட்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவகங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோபமுற்ற உணவக உரிமையாளர்கள், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும் தடையை மீறி திறந்து வைக்கப்பட்டன.
இதனால் பாரியளவில் கொரோனா தொற்று அதிகளவில் பரவக்கூடிய அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
No comments