Header Ads

🔴 பரிஸ் : குப்பையில் வீசப்பட்ட கொரோனா தடுப்பூசிகள்..!!

 


பரிசில் உள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை மையத்தில், தடுப்பூசிகள் பல குப்பையில் வீசப்பட்டுள்ளன. 

 
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள சிகிச்சை மையத்திலேயே இந்த தடுப்பூசிகள் வீசப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 20 வரையான ஊசி மருந்துகள் குப்பையில் வீசப்பட்டுள்ளன. 
 
நோயாளிகளுடனான போதிய ரொடர்பு இல்லாததால், மருந்துகள் வீணாகின்றதாகவும், பழுதடையும் நிலையில் உள்ள மருந்துகளே இவ்வாறு வீசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
<<20 தடுப்பு மருந்துகள் வரை வீசப்பட்டது உண்மைதான். திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அன்று தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள இருந்தவர்கள் சமூகமளிக்கவில்லை. இதனால் அன்று மாலையுடன் மருந்துகள் காலாவதி ஆகின்றதால் அவை வீசப்பட்டன!>> என குறித்த நிலையத்தில் பணிபுரியும் தாதி ஒருவர் தெரிவித்தார். 
 
நாடு முழுவதும் பல பகுதிகளில் போதிய தடுப்பூசிகள் கிடைக்காமையால் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தடுப்பு மருந்துகள் வீசப்பட்டமை தொடர்பான உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

No comments

Powered by Blogger.